தேர்தல் பத்திரம் மூலம் நிதியை அள்ளிய ஆளுங்கட்சிகள்... பரபர ரிப்போர்ட்!
தேர்தல் நன்கொடை பெற்ற கட்சிகளில் பாஜக மட்டுமின்றி, பல கட்சிகள் அதிகளவு நிதியைப்பெற்றுள்ளன. இதில் ஐந்து மாநில கட்சிகள் மட்டுமே, 2022-23 நிதியாண்டில், ரூபாய் 1,245 கோடி பெற்றுள்ளன. அதன் விவரங்களைப்பார்ப்போமா...
பாரத் ராஷ்டிர சமிதி (தெலுங்கானா) ரூபாய் 529 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் (மே.வங்கம்) ரூபாய் 325கோடி
திராவிட முன்னேற்றக்கழகம் (தமிழகம் )ரூபாய் 185கோடி
பிஜு ஜனதா தளம் (ஒடிஷா) ரூபாய் 152 கோடி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஆந்திரா) ரூபாய் 52 கோடி.
தேர்தல் பத்திரம் மூலம் இந்தியாவில் அதிகளவு நன்கொடை பெற்ற கட்சிகளில் முதலிடத்தில் திரிணாமுல் காங்கிரசும், அடுத்த இடத்தில் திமுகவும் உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ்-93 சதவிகிதம், திமுக 90 சதவிகிதம்,பிஜு ஜனதா தளம் 90 சதவிகிதம், பாரத் ராஷ்டிர சமிதி 80 சதவிகிதம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 72 சதவிகிதம், காங்கிரஸ் 63 சதவிகிதம்.
தேர்தல் பத்திரத்திரம் மூலம் நிதி வழங்க தடை விதித்ததன் மூலம் இந்த அரிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஒன்று மட்டும் நிச்சயம் ஆளும் கட்சியாக இருந்தால் அள்ளலாம் நிதியை !
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!