மாதம் ரூ1000 திட்டம் !! வதந்தியால் பரபரப்பு!!

 
ஆலங்குடி

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

மகளிர் உரிமை தொகை

இதையடுத்து, மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கான தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன. குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஒருவர் இந்த உரிமை தொகையை பெறலாம். குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின்நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வதந்தி ஒன்று பரவியது.கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாயைப் பெற முடியும் என்ற ரேசன் கடை ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆலங்குடியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் புதிய கணக்கு தொடங்க குவிந்தனர். இதனால், வங்கிக்கு வெளியே சாலையிலும் வரிசை நீண்டிருந்தது.

மகளிர் உரிமை தொகை


எப்போதும் கூட்டமின்றி இருக்கும் இந்த வங்கியில், திடீரென நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்ததால், வங்கி அலுவலர்களே திக்குமுக்காடிப் போயினர். இதையடுத்து, வங்கிக்குச் சென்ற வட்டாட்சியர், தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் போதுமானது என பெண்களிடம் எடுத்துக் கூறினார்.இதனால், பாதி கூட்டம் கலைந்தது. ஆனாலும், எதற்கும் ஒரு கணக்கை தொடங்கி வைப்போம் என பெண்கள் பலரும் புதிய வங்கிக் கணக்கை தொடங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web