சபரிமலையில் ஆக.12ல் நிறைபுத்தரிசி பூஜை... குவியும் பக்தர்கள்!
ஆகஸ்ட் 12ம் தேதி சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்தும் பம்பையில் குவிந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஆலயம் உலகப்பிரசித்தி பெற்றது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையுடன் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை நடைதிறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே போல் ஆண்டு தோறும் சபரிமலையில் ஆடிமாதம் நிறைபுத்தரி பூஜை செய்யப்படுகிறது அந்த வகையில் நடப்பாண்டில் நிறைபுத்தரி பூஜை ஆகஸ்ட் 12ம் தேதி திங்கட்கிழமை காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இதற்காக சபரிமலை பிரத்தேயகமாக ஆகஸ்ட் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. நிறைபுத்தரி பூஜைக்கான நெல் கதிர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.. இதற்கான ஏற்பாடுகளை திருஆபரணக் கமிட்டி தலைவர் தென்காசி ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன், உபதேச கமிட்டி தலைவர் பிஜூலால் அச்சன்கோவில் தேவசம் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை ஆகியோர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் அனைத்து முக்கிய திருக்கோவில்களிலும் ஆடி மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.சுவாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கபடும்

நெல்கதிர்களை வாங்கி வீடுகளில் வைக்க ஜஸ்வரியம் பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம்.இதனால் நெல்கதிர் பிரசாதம் வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைபுத்தரி நெல்கதிர்களில் இருந்து கைகுத்தல் மூலம் புது அரிசி எடுத்து கைகுத்தல் மூலம் அரிசியாக்கபட்டு புது அரிசியில் சுவாமி ஐயப்பனுக்கு அரிசி பாயாசம் நைவேத்தியம் செய்து படைக்கப்படும். ஆகஸ்ட் 12ம் தேதி திங்கட்கிழமை காலை 5.45 முதல் 6.30 மணிக்கு நிறைபுத்தரி பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
