சோகம்... தூத்துக்குடியில் தீக்குளித்த காவலாளி உயிரிழப்பு!
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி கோரம்பள்ளம் ராஜபாண்டி நகரைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (46). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிய இவர், மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாராம். இந்நிலையில், அவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர், கடந்த 9ம் தேதி கோரம்பள்ளம் பியூலாநகர் சந்திப்பு பகுதியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
