சோகம்... திருச்சி காவிரியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி!
திருச்சி முக்கொம்பில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் காவிரியில் குளிக்க சென்றனர். அப்போது காவிரி ஆற்றில் மூழ்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், மூழ்கிய மாணவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டதில் திருச்சி ரிஷபர் கல்லூரியைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது
தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து சென்று மாணவர்களின் உடல்களைத் தேடி வந்த நிலையில், அவர்களில் ஜனார்த்தனன் உடல் மீட்கப்பட்டுள்ளது. லோகேஷ் உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மாணவர்கள் முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு வந்து காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவிரியில் தற்போது பத்தாயிரம் கன அடி தண்ணீர்ர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஆடிப்பெருக்கு முன்னிட்டு யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் ஜாலி சுற்றுலாவாக வந்து, அங்கே குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?