பிறந்தநாளில் உயிரிழந்த சோகம்... பரிதாபமாக பலியான கல்லூரி மாணவன்... கதறிய நண்பர்கள்!
கல்லூரி மாணவர் ஒருவர் பிறந்தநாளில், கிணற்றில் இறங்கிய விளையாடி நிலையில், உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சந்தோஷமாக துவங்கிய விளையாட்டு, நண்பர்களை உருக்குலைய செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சக்தி பிரகாஷ் (21). விடுதியில் தங்கி திருச்சி கேர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சக்திபிரகாஷ், சக மாணவர்களுடன் பூங்குடி கிராமத்தில் உள்ள விவசாய கிணறு அருகே மது அருந்தியதாக தெரிகிறது.
அதன்பின் மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிணற்றில் இறங்கி குளித்தனர். இதில் சக்தி பிரகாஷ் எதிர்பாராதவிதமாக கிணற்று நீரில் மூழ்கினார். இதுக்குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு மாணவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர், கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றனர்.
பின்னர், கிணற்றில் சடலமாக கிடந்த சக்தி பிரகாஷை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!