சோகம்.. மரணிக்கும் தருவாயிலும் பள்ளி மாணவர்களை காப்பாற்றிய வேன் ஓட்டுனர்!
Jul 25, 2024, 16:20 IST

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி பேருந்தை ஓட்டினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பள்ளி வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கையே சரிந்து விழுந்தார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தான் இறக்கும் நிலையிலும் மாணவர்களை காப்பாற்றிய அவரது செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
From
around the
web