சோகம்.. ரயில் மோதி காட்டு யானை படுகாயம்.. நகர முடியாமல் தவிக்கும் அவல நிலை!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டேக்காடு ரயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் காயமடைந்த யானை ஒன்று கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.யானையின் பின்னங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு யானை எழுந்து நிற்க முடியாமல் தவித்தது.
மேலும் பல நாட்களாக ஒரே இடத்தில் கிடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலில் மோதி யானை பலத்த காயம் அடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத இன்ஜின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த யானையால் நகர முடியாததால் அருகில் உள்ள யானைகள் முகாமில் இருந்து உணவு மற்றும் மருத்துவ உதவிகள் கொண்டுவரப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!