விஜய்யை தொடர்ந்து சஞ்சய் தத் அரசியல் பிரவேசம்... ரசிகர்கள் கொண்டாட்டம்!
திரையுலகில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது கருணாநிதி, எம்ஜிஆர் காலத்திலிருந்தே வழக்கமான ஒன்று தான். ஜெயலலிதா, சிவாஜி, கண்ணதாசன், ராமராஜ், வாகை சந்திரசேகர், டி.ராஜேந்தர், கார்த்திக், கருணாஸ், குஷ்பு, காயத்ரி ரகுராம், கமலஹாசன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இவரை அடுத்து விஜய் ஆண்டனி அரசியலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் தற்போது லியோ பட வில்லன் சஞ்சய் தத் அரசியலுக்கு வருவதாக பேச்சு அடிபடுகிறது.
விஜய்க்கு பிறகு சஞ்சய் தத் அரசியலில் குதிப்பாரா என்ற கேள்வி சமீப காலமாக எழுந்துள்ளது. இவர், கேஜிஎஃப் 2, லியோ போன்ற படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர். மிரட்டும் வில்லனாக நடித்ததற்காக ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றுள்ளார்.
I would like to put all rumours about me joining politics to rest. I am not joining any party or contesting elections. If I do decide to step into the political arena then I will be the first one to announce it. Please refrain from believing what is being circulated in the news…
— Sanjay Dutt (@duttsanjay) April 8, 2024
நடிகர் விஜய் அரசியல் கட்சியை நிறுவியதால், லியோ பட வில்லன் சஞ்சய் தத்தும் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகின. இதைத் தெளிவுபடுத்துமாறு, சஞ்சய் தத் தனது X வளைதள பக்கத்தில் பதிலளித்தார். X தளத்தில் இதற்கான விளக்கமாக, "நான் அரசியலுக்கு வருவதைப் பற்றிய வதந்திகளை நிறுத்த விரும்புகிறேன், நான் எந்த நிகழ்ச்சியிலும், தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன்."
மேலும், எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால், நான் முதல் ஆளாக அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன். இப்போது என்னைப் பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம் என்று பதிவிட்டார் சஞ்சய் தத்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!