டெல்லி ஹோம் கார்ட்ஸ் இயக்குநரகத்தின் சிறப்பு அதிகாரியாக சதீஷ் கோல்ச்சா நியமனம்!

 
ஹோம் கார்ட்ஸ் இயக்குநரகம் அதிகாரி சதீஷ் கோல்ச்சா

டெல்லியின் முன்னாள் காவல் ஆணையரான சதீஷ் கோல்ச்சா, டெல்லி அரசின் ஹோம் கார்ட்ஸ் இயக்குநரகத்திற்குப் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி காவல் துறையில் முக்கியப் பதவிகளை வகித்த சதீஷ் கோல்ச்சா, தற்போது ஹோம் கார்ட்ஸ் இயக்குநரகத்தில் 'சிறப்புப் பணி அதிகாரி'யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள இவர், வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியன்று ஹோம் கார்ட்ஸ் துறையின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த இவரது இந்த புதிய நிர்வாக மாற்றமானது டெல்லி காவல் மற்றும் பாதுகாப்பு வட்டாரத்தில் முக்கிய நகர்வாகக் பார்க்கப்படுகிறது.