கர்ப்பிணிகளுக்கு ரூ.24,000 !! எப்படி பெறலாம்?! முழு தகவல்கள்!!

 
கர்ப்பிணி

நாடு முழுவதும் கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின் போது உயிரிழப்பை தடுக்கவும் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதை உறுதி செய்யவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணி பெண்கள் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் பெற்று ஆரோக்கியமாகவும் இருந்தால், குழந்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றன. 

கர்ப்பிணி

இதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்படுத்தி. இதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு 4 தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்ய கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தை நாட வேண்டும்.

மேலும் முழுவதுமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு முழு தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சுகாதார மையத்தில் தங்களின் கர்ப்பத்தை பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் சுகாதார மையத்தில் கூறியது போல தடுப்பூசி செலுத்த வேண்டும்.

கர்ப்பிணி

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு தான் இந்த திட்டத்தின் மூலமாக தொகை வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உதவி தொகையை பெற நிர்ணயிக்கப்பட்ட படிவங்களை அங்கன்வாடி மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.மத்திய அரசின் மகளிர்-குழந்தைகள் நல அமைச்சகத்தின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

From around the web