டிசம்பர் 26 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!

 
விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் மிகவும் பழமையான கோவிலான மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.

ராமநாதபுரம்

அந்த வகையில் இந்த வருடம் ஆருத்ரா திருவிழா வரும் 26-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். எனவே வரும் 26-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜனவரி 6-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

விடுமுறை

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 6-ம் தேதி அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், டிசம்பர் 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

From around the web