சோகம்.... பள்ளி மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!! கதறி துடித்த பெற்றோர்!!

 
விக்ரம்

விருதுநகர் இளங்கோவன் தெரு பகுதியில் வசித்து வருபவர்  வெங்கடேசன். இவரது மனைவி தங்கமீனா. இவர்களுக்கு   ஒரு மகளும், அருண்குமார் விக்ரம்   என்ற மகனும் உள்ளனர். இதில் அருண்குமார் விக்ரம் விருதுநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் அருண்குமார் விக்ரம் நீச்சல் பயிற்சிக்கு நகரில் தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிக்கச் சென்றார். 

நீச்சல்


அருண்குமார் விக்ரம் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். இதனால் அவன் கொஞ்சம், கொஞ்சமாக  நீரில் மூழ்கத் தொடங்கினான். அப்போது அந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிறுவனை மீட்ட கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை முடியாத நிலையில் சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கதறி துடித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆம்புலன்ஸ்


 
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவனின் உயிரிழப்புக்கு   கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனவும்  உடனடியாக கல்லூரி நிர்வாகம் தரமான பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web