குளிர்பான கேனை பயன்படுத்தி AK- 47 செய்த பள்ளி மாணவன் தற்காலிக இடை நீக்கம்!

 
குளிர்பான கேனை பயன்படுத்தி  AK- 47 செய்த பள்ளி மாணவன் தற்காலிக இடை நீக்கம்!  

அமெரிக்காவின் மிசூரி மாநில ஹொவல் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது மவுண்டன் வியூ – பிர்ச் ட்ரீ பள்ளி. இந்த பள்ளியில்  ஒரு 13 வயது மாணவன் சமூக வலைதளத்தில் “AK-47” போல காணப்படும் கேரளா பானக் கேன்கள் படத்தை வெளியிட்டதாக 3 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த மாணவனின் தாய் ரிலி கிரண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குளிர்பான கேனை பயன்படுத்தி  AK- 47 செய்த பள்ளி மாணவன் தற்காலிக இடை நீக்கம்!  

Snapchat ல் “W.G.” என்ற பெயரில் மாணவன், Dr. Pepper பானக் கேன்களை AK-47 துப்பாக்கியை போல ஒட்டி ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்துள்ளார்.  அதனுடன், “AK-47” எனும் ஒரு பாடலையும் சேர்த்திருந்தார்.  இதில் மாணவன் துப்பாக்கி போல் கேன்களை தூக்கி வைத்திருக்கவில்லை எனவும்  தரையில் வைத்த எடுத்த படம் தான் எனவும் தாய் விளக்கம் அளித்துள்ளார்.  
இந்நிலையில், இந்த படத்தைப் பார்த்த மற்றொரு மாணவனுக்கு பயம் ஏற்பட்டதாக கூறி, பள்ளி நிர்வாகம் மாணவனை பள்ளியில் அழைத்து வந்து சோதனை நடத்தினார் . அத்துடன் 3 நாட்கள் இடைநீக்கம் விதித்தது. இந்த இடைநீக்கம் மாணவனின் நிரந்தர கல்வி பதிவில் இடம்பெறுவதால், எதிர்கால உயர்கல்வி வாய்ப்புகளில் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

குளிர்பான கேனை பயன்படுத்தி  AK- 47 செய்த பள்ளி மாணவன் தற்காலிக இடை நீக்கம்!  
மாணவர் எதற்கும் அபாயம் இல்லாதவர் என்பதும், எவரையும் மிரட்டும் நோக்கத்தோடு அவர் செய்தியொன்றும் வெளியிடவில்லை என வலியுறுத்தியுள்ளார் .  பள்ளியின் வெளியே மாணவர்கள் என்ன செய்யக்கூடாது என்பதற்கான தெளிவான விதிகள் இல்லாததால், 14வது திருத்தச்சட்டத்தின் கீழான ‘vagueness’ விதியை பள்ளி மீறியுள்ளது.   தண்டனை நீக்கப்பட்டு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் ரிலி கிரண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

From around the web