மத கலவரத்தில் முடிந்த பள்ளி மாணவர்கள் சண்டை.. இஸ்லாமியர் வீட்டை இடித்த மாவட்ட நிர்வாகம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது இரு மாணவர்களும் தகராறு செய்ததாகவும் இதன் போது ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. கத்தியால் குத்திய மாணவன் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
🚨 Massive outrage has erupted in Udaipur, Rajasthan, after a Dalit Hindu 10th-grade student was reportedly attacked within her school premises.
— Beats in Brief (@beatsinbrief) August 16, 2024
The minor was allegedly stabbed multiple times by a fellow Muslim student, intensifying communal tensions in the region. #Udaipur pic.twitter.com/PpF7oXYNZC
இத்னால் பள்ளி அமைந்துள்ள மதுபன் பகுதியில் வாகனங்கள் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். தாக்குதலுக்கு உள்ளான சிறுவனுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உதய்பூரில் இந்து அமைப்புகளுக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், மதக் கலவரமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே வதந்திகள் பரவாமல் தடுக்க உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை துண்டிக்கப்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன, இதற்கிடையில், பள்ளிகளுக்கு மாணவர்கள் கூர்மையான பொருட்களை கொண்டு வருவதற்கு ராஜஸ்தான் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரியர்கள் தினமும் சோதனை செய்ய வேண்டும் என்றும், யாராவது கூர்மையான பொருட்களை கொண்டு வந்தது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO | Rajasthan: #Udaipur district administration demolishes house of a boy accused of stabbing his classmate.
— Press Trust of India (@PTI_News) August 17, 2024
A mob set fire to cars and pelted stones amid communal tension in Udaipur after a class 10 student stabbed another boy at a government school on Friday.#udaipurnews… pic.twitter.com/h5U6EOywg2
கத்தியால் குத்திய மாணவர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைதான மாணவனின் குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டதால் முறையான நோட்டீஸ் கொடுத்து விதிகளின்படி வீடு இடிக்கப்பட்டது என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் கலவரம் தொடர்ந்ததால் மாணவனின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
