பகீர்!! பள்ளி மாணவி பாட்டிலில் சிறுநீர்!! பையில் காதல் கடிதம்!!

 
பாட்டிலில் சிறுநீர்

ராஜஸ்தான் மாநிலம் பில்வரா மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் சிலர்  அன்று வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் வாட்டர் பாட்டிலில் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்தனர். அத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பையில் போட்டுவிட்டனர். வெளியில் சென்று வகுப்பறைக்கு திரும்பிய மாணவி, வாட்டர் பட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியதை கவனித்து விட்டு அதனை குடிக்காமல் கீழே ஊற்றினார்.  

போலீஸ்

அதன் பிறகு தான் அதில்  மாணவர்கள் சிலர் சிறுநீரை நிரப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.   பள்ளி மீண்டும் திறந்ததும் தாசில்தார் மற்றும் அப்பகுதியில் உள்ள லுகாரியா காவல் நிலையத்தில் தெரிவித்தும் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதனால் மாணவியின் கிராமத்தில் வசிப்பவர்கள்   கொதித்தெழுந்தனர். குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  தடுக்க சென்ற போலீசார் மீதும் கற்களை வீசி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

பாட்டிலில் சிறுநீர்


இந்த வன்முறை போராட்டம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “இதுவரை பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை . இதனால் எந்த  வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web