சீமானை விடுவிக்க முடியாது... உயர்நீதிமன்றம் மறுப்பு!
Feb 6, 2025, 14:18 IST
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், வழக்கிலிருந்து விடுவிக்கவும் வேண்டும் என சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், சீமானின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் ஆஜரானால் தான் சீமானுக்கு நிதானம் வரும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்
