விடுதி கழிவறையில் ரகசிய கேமரா... சுற்றுலாப் பயணிகளே உஷார்!!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும், சுற்றுலா பயணிகளுக்காக 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், ஆச்சக்கரை பகுதியில் பல விடுதிகள் இயங்கி வருகின்றன.
ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சாஹத் தனது மனைவியுடன் தங்கியுள்ளார். அப்போது கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியதாக விடுதி ஊழியர் சிண்டு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதி ஊழியர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மசினகுடி பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்லும் நிலையில் ரகசிய கேமரா பொருத்தி பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!