சீமா பிஸ்லே விளையாடத் தடை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!
ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா. இவருக்கு வயது 30. இவர் இந்தியாவிற்காக 2021ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை ஆவார். இவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக அப்போதே புகார் எழுந்தது.
இந்நிலையில் சீமாவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஊக்க மருந்து தடுப்பு மையம் பிறப்பித்துள்ளது. இதற்கான தடைக்காலம் இந்த ஆண்டு மே 12 அன்று தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீமா வெண்கலம் வென்றார். அவர் 2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் 50 கிலோ ரவுண்ட் ஆஃப் போட்டியில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?