செம... பழைய சோறும், பச்ச மொளகாவும் புற்றுநோயைத் தடுக்கும்... வெளியான ஆய்வு முடிவுகள்!

 
பழைய சோறு

ப்ரைட் ரைஸ், மஸ்ரூம் பிரியாணி, சிக்கன் நூடுல்ஸ் துவங்கி, கொத்து பரோட்டாவை சால்னாவில் தொட்டு சாப்பிடுபவர்கள் வரை பாஸ்ட் புட் உணவு முறைகளுக்கு அடிமையாவது தெரியாமலேயே தங்கள் ஆயுளையும் குறைத்து கொண்டு வருகிறார்கள். ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும் என்பது காலம் காலமாக நம்மிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் முதுமொழி.

நாம் பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் விதவிதமாக பிரியாணிகளையும், பீசாக்களையும், கேஎஃப்சி சிக்கன்களையும் ஒரு பிடி பிடித்து வரும் அதே சமயத்தில் தான் பழைய சாதத்தையும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சைட் டிஷ்ஷூடன் ஸ்டார் ஹோட்டல்களில் மண் பானைகளில் பரிமாறி ஆயிரங்களில் பில் தருகிறார்கள். அமெரிக்காவில் ஒரு குட்டிப் பாதை பழைய சோறு சுமார் 100 டாலர் விலை வரை விற்பனை செய்யப்படுகிறது. நூறு டாலர்கள் என்பது கிட்டத்தட்ட 900 ரூபாய். இந்நிலையில், முன் தினம் இரவே தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த பழைய சோறு குறித்த ஆய்வுகளில் இவை புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  

நொதித்த அரிசிக்கஞ்சி தண்ணீரில், உயிரி மூலக்கூறுகள்  அதிகமிருப்பத்தால் குடல் செல்களின் எதிர்ப்புத் தன்மையை மூலக்கூறு வெளிப்பாடு  மூலம் அதிகமாக்குவதால், "பழைய சோறு" பயனுள்ளதாக உள்ளது எனக் கூறுகின்றன ஆய்வு முடிவுகள்.   

பழைய சோறு

தமிழகத்தில் தொன்றுதொட்டே, பழைய சோறு மற்றும் சோற்று நீரில் நல நுண்ணுயிரிகள் அதிகமிருந்து குடல் சுகாதாரத்தை பேணிகாப்பது பரம்பரை அறிவாக இருந்து வந்துள்ளது. இவை குடலுக்கு நன்மை விளைவிக்கும் நலநுண்ணுயிரிகள். நொதித்தல் மூலமாக வெளியாகும் வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள் குடலின் செல்களை வலிமைப்படுத்தி குடல் சுகாதாரத்தை பேணிகாக்கின்றன.  நொதித்தல் காரணமாக உருவாகும் வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள் குடல் செல்களை வீக்கம் மற்றும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து காக்கிறது என்கின்றன  ஆய்வு முடிவுகள் .  

பழைய சோறு
வடித்த சோறு ஆறியபின், நீர் கலக்கப்பட்டு, மண்பாத்திரத்தில் 10 மணி நேரம் ஊற வேண்டும். இதன் பிறகு பெறும் பழைய சோற்று நீரில் 200க்கும் மேற்பட்ட வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்களும், நல நுண்ணுயிரிகளும் வளர்கின்றன. நம் முன்னோர்களின் அறிவியல் திறனுக்கு பழையசோறும், நீராகாரமும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன.  நமது பாரம்பரிய உணவான பழைய சோற்றை இனியாவது,   அதிகம் உட்கொண்டு நமது சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web