“ஏய்... நீ மொத இறங்கி வா.. ” எம்.பி. ஜோதிமணியின் காரை வழிமறித்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வின் தங்கை... லெப்ட் ரைட் வாங்கிய இளம்பெண்!

 
ஜோதிமணி

தாராளமா வோட்டு கேட்டு போங்க... ஆனால் இல்லாததை எல்லாம் சொல்லி அவதூறு பரப்பி வோட்டு கேட்காதீங்க.. நீங்க என்ன செஞ்சீங்கன்னு சொல்லி வோட்டு கேளுங்க.. என்று ஜோதிமணியிடம் மல்லுக்கட்டினார். 

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில்  பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அவருடன் வேடசந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ காந்திராஜனும் சென்றார். வேடசந்தூர் குக்கிராமத்தில் பிரச்சாரம் செய்து விட்டு திரும்பிய ஜோதிமணியின் கார், இரவில் திடீரென ஒரு கிராமத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இளம்பெண் ஒருவர் தலைமையில், சில முதியவர்கள் காரை மறித்துள்ளனர்.

  

“ஏம்மா முதல்ல இறங்கு.. எங்கள ஏத்திடுவியா.. அதையும் பார்க்கலாம்” என்றனர். அந்த இளம்பெண், எங்கள் அண்ணனை ( வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம்) பற்றி எப்படி தப்பா பேசுவ?” என ஆவேசமாக கேள்விகளை தொடர்ந்தார். ஜோதிமணியின் காரை பின்தொடர்ந்து வந்த வேடசந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ காந்திராஜன், கீழே இறங்கி பெண்கள் உள்ளிட்ட பெரியவர்களை சமாதானப்படுத்தினார். அப்போதும் ஆவேசத்தை அடக்க முடியாத இளம்பெண் எம்.எல்.ஏ. காந்திராஜனிடம், பெரியப்பா.. அந்த அம்மாவிடம் சொல்லுங்கள்.. எதுக்கு தப்பா எங்க அண்ணனை பேசறீங்க.. ஓட்டு கேட்டுப் போறீங்க.. நல்லா கேளுங்க..  என்று கடுமையாக பேசினார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் விபிபி பரமசிவம், திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ. காந்திராஜன் இருவரும் உறவினர்கள். ஜோதிமணியின் காரை நிறுத்திய பெண்ணும் இருவரின் உறவினர். எனவே, உறவின் அடிப்படையில் காந்திராஜனை பெரியப்பா என்றும், பரமசிவத்தையும் அண்ணன் என்று அழைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web