‘காதலிக்காக திருடினேன் சார்...’ போலீசாரிடம் சிக்கிய பைக் திருடன்!

 
மணிகண்டன்

கும்பகோணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்கிறது. குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதிகளை குறிவைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்தன. மோட்டார் சைக்கிள் திருடு போனதாக கும்பகோணம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

பைக் திருட்டு

இதையடுத்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திவாசன் உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், தனிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் சரகம் அம்மங்குடி புத்தகரம் தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டனை (வயது 28) கைது செய்து விசாரித்தனர்.

கைது

விசாரணையில் அவர் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், காதலி அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக மோட்டார் சைக்கிள்களை திருடியதாகவும், இதுவரை 8 மோட்டார் சைக்கிள்களை திருடியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா