ஸ்பாவில் பாலியல் தொழில்.. 9 பெண்கள் மீட்பு - மேலாளர் கைது!

 
விபச்சாரம் பாலியல் விபச்சாரம் பாலியல்

சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலைபகுதியில் ஸ்பா என்ற பெயரில் மறைமுகமாக நடைபெற்று வந்த பாலியல் தொழிலை நீலாங்கரை போலீசார் அதிரடிச் சோதனை நடத்தி முறியடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 9 இளம்பெண்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் முக்கியப் பகுதியான நீலாங்கரையில் இயங்கி வந்த மசாஜ் சென்டர் ஒன்றில், சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடைபெறுவதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. நீலாங்கரை சரக உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்குரிய அந்த ஸ்பாவில் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் என்ற பெயரில் அங்குப் பாலியல் தொழில் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.

விபச்சாரம்

அங்கிருந்த 9 இளம்பெண்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அரசுப் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்தச் சட்டவிரோதச் செயலை முன்னின்று நடத்திய ஸ்பா மேலாளரைப் போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

இந்த ஸ்பா யாருடைய பெயரில் இயங்கி வருகிறது? இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஸ்பாவுக்குச் சீல் வைக்கவும், அதன் உரிமத்தை ரத்து செய்யவும் மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் சமீபகாலமாக ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தொடர் சோதனைகளை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.