சிறுமி பாலியல் வன்கொடுமை... போக்சோவில் காதல் ஜோடி கைது.. 20 ஆண்டுகள் சிறை!

வேலூரைச் சேர்ந்தவர் சாந்தினி (22) என்பவருக்கு கடலுார் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ஜெகன் (22) என்பவருடன் இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு ஜெகனை, வேலூருக்கு சாந்தினி வரவழைத்தார். அப்போது, சாந்தினி தனது தோழியான 10ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை ஜெகனுக்கு அறிமுகம் செய்துள்ளார். இதற்கிடையில், சிறுமியை திடீரென காணவில்லை.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடினர். அதில், ஜெகனும், சாந்தினியும் சேர்ந்து சிறுமியை கடத்தியதுடன் சிறுமியை, ஜெகன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதும் தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்பட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெகனையும், சாந்தினியையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். ஜெகன் மற்றும் சாந்தினி மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜெகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், சாந்தினிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!