சொகுசுக் கப்பலில் அருவருப்பு ... சொறிந்துவிட்டு அதே கையால் சாப்பிட்ட பெண்... வைரல் வீடியோ!

 
ship

கர்னிவல் க்ரூஸ் சொகுசுக் கப்பல் பயணத்தில் பதிவான ஒரு வைரல் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் தனிநபர் சுகாதாரத்தைப் பேண வேண்டிய அவசியத்தை மீண்டும் உணர்த்தும் வகையில் இந்த அருவருப்பான காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சொகுசுக் கப்பலில் பயணம் செய்த பெண் ஒருவர் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது இந்தத் திடீர் விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது திடீரெனக் காலில் அரிப்பு ஏற்பட்டதால், தனது செருப்பைக் கழற்றிவிட்டுக் கால்களைத் தன் கைகளால் அப்பெண் சொறிந்துள்ளார்.

காலில் உதிர்ந்த தோல் செதில்கள் வரை இருந்தபோதிலும், கைகளைக் கழுவவோ அல்லது துடைக்கவோ செய்யாமல் அப்படியே உணவை எடுத்து உண்டுள்ளார். அருகில் இருந்த மற்ற பயணிகள் இதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த நிலையிலும், அப்பெண் அதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டுள்ளார். பொது இடங்களில் மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளும் சூழலில் இத்தகைய அலட்சியமான போக்குச் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் எனக் கூறப்படுக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பொதுப் பயணங்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் தனிநபர் சுத்தத்தைக் கடைப்பிடிப்பது ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற சொகுசுக் கப்பல்களில் சுகாதார நடைமுறைகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்ற கேள்விகளையும் பயணிகள் பலர் எழுப்பியுள்ளனர்.