அதிர்ச்சி !! கார் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி!! கதறி துடித்த தாய்!!

 
தமிழினி

ஈரோடு மாவட்டம் சிவகிரி நெசவாளர் காலனியில் வசித்து வருபவர்   பூபாலன்.   இவர் இருசக்கர மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.   இவரது மனைவி மோகன பிரியா . இவர்களுக்கு  6வயதில் தமிழ் மாறன் என்ற மகனும், தமிழினி என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர். பூபாலனின் தாய் விஜயாள் . இவர் சிவகிரி ஜீவா தெருவில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து  வருகிறார். விஜயாள் நேற்று காலை வேலைக்கு செல்லும் போது தமிழினியை அழைத்து சென்றுள்ளார்.இந்த நிலையில் மதியம் விஜயாள் நிறுவனத்தில் உள்ளே வேலை பார்த்து கொண்டிருந்தார்

விபத்து

அப்போது தமிழினி நிறுவனத்தின் வாசலுக்கு வந்து நின்றார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பின்னோக்கி எடுக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக தமிழினி மீது கார் மோதியது.இந்த விபத்தில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துமவனையில் சேர்த்தனர்.

குழந்தை உயிரிழப்பு

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு தமிழினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகிரி போலீசார், தமிழினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய டிரைவர் சுப்பிரமணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web