அதிர்ச்சி... பெண்ணின் உள்ளாடைக்குள் 5 பாம்புகள்.. துணிச்சலாக கடத்திச் சென்ற பகீர் சம்பவம்!

 
பாம்பு

இளம்பெண் ஒருவர், தனது உள்ளாடைக்குள் 5 வகையான அரிய பாம்புகளை தைரியமாக மறைத்து வைத்து, கடத்திச் செல்ல முற்பட்ட போது துறைமுக சோதனையில் சிக்கியது சீனாவில் பெரும் அதிர்வையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள புகழ் பெற்ற புக்சியான் துறைமுகத்தில் அதிகாரிகள் வழக்கம் போல பயணிகளை சோதனைச் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், புக்சியான் துறைமுகத்தில் இருந்து ஹாங்காங் செல்லும் கப்பலில் ஏறுவதற்காக சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்  மீது பாதுகாப்பு சோதனை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணை தனியே அழைத்து சோடனை செய்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் அந்த இளம்பெண்ணின் மார்பு பகுதி இருந்ததையடுத்து, பெண் அதிகாரிகளை வரவழைத்து அந்த பெண்ணை மேலும் தீவிரமாக சோதனைச் செய்தனர்.

சோதனையில், அந்த இளம்பெண், தனது உள்ளாடைக்குள், குட்டி குட்டி துணி பைகளில் தனித்தனியே அடைத்து வைத்து 5 அரிய வகை பாம்பு குட்டிகளை மறைத்து வைத்து, கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

china

தனது  மார்பகங்களுக்கு இடையே இந்த பாம்பு குட்டிகளை தைரியமாக அந்த இளம்பெண் மறைத்து வைத்திருந்து கடத்திச் செல்ல முற்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பின்னர், அந்த இளம்பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த அரிய வகையிலான பாம்புகள் அனைத்தும் அமெரிக்காவில் தென்படும் உயிரினமாகும். இந்த பெண்ணின் அடையாளத்தை சுங்க அதிகாரிகள் வெளியே தெரிவிக்கவில்லை. அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளின் படங்களை மட்டும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

china

இதே போன்று புக்சியான் துறைமுகத்தில் கடந்த மாதம் தனது காலணிகளில் 112 நிண்டெண்டோ ஸ்விட்ச் கேம் கார்டுகளை ஒருவர் கடத்திச் செல்ல முற்பட்ட போது இளம்பெண் ஒருவர் பிடிபட்டார். விசித்திரமான முறையில் அந்த இளம்பெண் நடந்து சென்று கொண்டிருப்பதை கவனித்து சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் 2,415 SD கார்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இளம்பெண்கள் இப்படி உள்ளாடைக்குள் வைத்து கடத்திச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web