அதிர்ச்சி.. தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு.. கூலித்தொழிலாளி கொடூரமாக குத்திக்கொலை!

 
மாரியப்பன்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகரில் வசிப்பவர் குட்டையன். இவரது மகன் மாரியப்பன். பிளாஸ்டிக் பொருட்களை விற்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிறிய கொட்டகையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், தினமும் தங்கையின் கணவர் வீட்டுக்கு தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கம்.

ஆனால் இவர்களது வீட்டின் அருகே உள்ள பண்டாரம் என்பவரின் மகன் லட்சுமணன் (வயது 60), தனது அண்ணன் ராஜு வீட்டில் (தண்ணீர் தகராறில் கொலையான கடையநல்லூர்) எப்படி தண்ணீர் எடுப்பாய்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செருப்பு தயாரிக்கும் தொழிலாளியான லட்சுமணன், வாக்குவாதம் முற்றவே, மாரியப்பனை வேலைக்கு பயன்படுத்தும் கத்தியால் தாக்கினார். மாரியப்பனை அவரது உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்ததால், கடையநல்லூர் போலீசார் உடனடியாக சென்று விசாரித்தனர். விசாரணையில் மேற்கண்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்ததும், தலைமறைவான லட்சுமணனை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பலியான மாரியப்பனுக்கு பேச்சியம்மாள் (35) என்ற மனைவியும், முத்துராஜ் (13), போத்திராஜ் (2), பொத்திமுத்து (1) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web