மீண்டும் அதிர்ச்சி.. கனடாவில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல்.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

கனடாவின் எட்மன்டன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் உள்ளது. அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வர்ணம் பூசி சேதப்படுத்தியுள்ளனர். நேப்பான் தொகுதிக்கான எம்.பி. சந்திர ஆர்யாவின் கூற்றுப்படி, இந்து மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் நேரடியாக அதிகரித்து வருகின்றன. சுவாமி நாராயண் கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கிரேட்டர் டொராண்டோ பகுதி, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கனடாவின் பிற பகுதிகளில் கோயில் சுவர்களில் வெறுக்கத்தக்க விஷயங்களை எழுதுவது உட்பட தாக்குதல்கள் நடந்ததாக X சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்து கனேடியர்களுக்கு எதிரான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு முன் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்யா வலியுறுத்தினார். இதில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என நேரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேபோன்று, கனடா நாடாளுமன்ற உறுப்பினரான ராண்டி பொய்சான்னால்ட் , (Randy Poissonault) கோயிலில் ஓவியம் வரைந்து வெறுப்பை பரப்பியுள்ளனர். கனடாவில் வெறுப்புக்கு இடமில்லை, வழிபாட்டுத் தலங்களிலும் பிரார்த்தனை தலங்களிலும் அதற்கு இடமில்லை.
"இது எங்கள் நகரத்தின் மதிப்புகளுக்கு எதிரானது மற்றும் அது தவறானது," என்று அவர் கூறினார். கனடாவில் மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதிகளில் உள்ள கோயில்கள் இதற்கு முன்பும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இதற்கு இந்திய சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு, விண்ட்சரில் உள்ள ஒரு இந்து கோவில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களால் சேதப்படுத்தப்பட்டது. இதற்குப் பரவலான கண்டனங்கள் எழுந்தன. கனேடிய மற்றும் இந்திய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா