தேர்தல் நேரத்தின் போது அதிர்ச்சி.. மன உளைச்சலில் துணை வட்டாட்சியர் தற்கொலை!

 
நர்மதா

சேலம் மேட்டூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பணியாற்றி வந்தவர் நர்மதா (37). இவரது கணவர் மணிகண்ட சபரி (38) மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், நர்மதா தேர்தல் துணை மாவட்ட வட்டாட்சியர் நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது கணவர் மணிகண்ட சபரி மேட்டூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மனைவி மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தலின் போது தேர்தல் துணை வட்டாட்சியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web