கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரியில் மீண்டும் அதிர்ச்சி.. மருத்துவ மாணவி மர்ம மரணம்!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அதே ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள காமர்ஹட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவ மாணவி ஐவி பிரசாத்.
இந்நிலையில் மாணவி ஐவியின் தாயார், தனது மகளுக்கு போன் செய்த போது தொடர்ந்து மாணவி செல்போன் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், சந்தேகமடைந்த தாய், மாணவியின் அறைக்கு பதறியபடி சென்றுப் பார்த்தார்.
அப்போது, தனது மகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து, தனது மகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்து விட்டதாக புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி பணியில் இருந்தபோது ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் முதுகலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!