“பொண்டாட்டியை விட்டு பிரிய மாட்டேன்” புற்றுநோயால் பாதித்தவர் மனைவியை கொன்று தானும் தற்கொலை!

 
 குல்தீப் தியாகி

“என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை. மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு, தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலராக பணி செய்து வந்தவர் குல்தீப் தியாகி (46). இவர் தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

திடீரென வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டு, இவரது 2 மகன்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அம்மா, அப்பாவை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் ஏற்கனேவே இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குல்தீப்பின் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், "நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினருக்கு இது பற்றித் தெரியாது. என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

மறுவீட்டுக்கு சென்ற புது மாப்பிள்ளை மர்ம மரணம்!! அதிர வைக்கும் திருப்பங்கள்!!

நானும் என் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்துள்ளதால், என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு" என்று குல்தீப் எழுதியுள்ளார்.

வீட்டிலிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

 

From around the web