கோவையில் அதிர்ச்சி... இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்... மூன்று பேரும் உயிரிழந்த பரிதாபம்!

 
ரயில் தண்டவாளம் தற்கொலை

கோவையில் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், தனது மகன் மற்றும் மகளுடன் தாய் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைச் செய்து கொண்டதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (50). இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16) என்ற மகனும் ஜனனி (15) என்ற மகளும் உள்ளனர்.   கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகமூர்த்தி காணமால் போன நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில் வரலட்சுமி புகாரளித்தார். காணாமல் போன விநாயகமூர்த்தியைத் தேடி வந்த நிலையில், வேலைத் தேடி கேரளத்திற்கு செல்வதற்காக மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களது உடைமைகளை யாரோ திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

ரயில் தண்டவாளம்

இந்நிலையில், கணவனையும் காணாத நிலையில், உடைமைகளையும் பறிகொடுத்த தாய், அந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தினருகே மூவருமாக அமர்ந்திருந்துள்ளனர். அப்போது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் முன்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் பாய்ந்து தற்கொலைச் செய்துக் கொண்டனர்.  

தற்கொலை

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web