தமிழகத்தில் அதிர்ச்சி... கஞ்சா விற்பனையில் கல்லூரி மாணவர்... 11 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுகிராமம் மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதையடுத்து கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் முத்துராமலிங்கம், அருணாச்சலம், செசிலின் வினோத், கழுகாசலமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு 2 பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் சுமார் 150 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் மயானத்தின் ஒரு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 11 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கோவில்பட்டி மந்திதோப்பு சாலை காமராஜர் நகரைச் சேர்ந்த குருசாமி மகன் சமையல் மாஸ்டர் ராஜசேகர பாண்டியன் (32), கோபாலபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஓட்டுநர் கருப்பசாமி (33), சுயநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 11 கிலோ 150 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,400, ,இரண்டு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!