வீட்டுக் கிச்சனில் செம ஷாக்... அறுவடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை உயிர் பிழைத்த தவளை... ஆச்சரிய வீடியோ!
அன்றாடச் சமையலுக்காக நாம் கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளில் சில நேரங்களில் புழுக்கள் அல்லது சிறிய பூச்சிகள் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வரப்பட்ட காய்கறிப் பை ஒன்றிற்குள், யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான உயிர் வாழ்ந்து கொண்டிருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமையலறையில் காய்கறிகளை வெட்டத் தொடங்கிய ஒரு நபர், அதில் இருந்த அந்த அதிசயத்தைக் கண்டு அப்படியே உறைந்து போய் நின்றுள்ளார்.
🇦🇺 An Australian farmer found a live frog inside a sealed bag of lettuce.
— Mario Nawfal (@MarioNawfal) May 19, 2026
They named him Greg, before releasing him… Greg will have some stories to tell 😂pic.twitter.com/LTXnj8WHkM
அவர் வாங்கி வந்த பச்சைக் காய்கறிப் பொதிக்குள் ஒரு சிறிய அளவிலான தவளை ஒன்று எவ்விதப் பாதிப்பும் இன்றி உயிருடன் இருந்துள்ளது. விவசாய நிலத்தில் காய்கறிகளை அறுவடை செய்து, அதனைப் பேக்கிங் செய்து, லாரிகள் மூலம் பல கிலோமீட்டர் தூரமுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு எடுத்து வந்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்தது வரை என அனைத்துக் கட்டங்களையும் கடந்து அந்தத் தவளை உயிர் பிழைத்துள்ளது. இத்தனை நாள்களாகக் காற்று மற்றும் உணவு இல்லாத சூழ்நிலையிலும் அது எப்படிப் பிழைத்தது என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காய்கறிப் பையைத் திறந்தவுடன் அந்தத் தவளை சமையல் மேடையில் அங்கும் இங்கும் துள்ளிக் குதித்து விளையாடிய காட்சிகளை அந்த நபர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த விசித்திரமான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருவதோடு, மிக வேகமாக வைரலாகியும் வருகிறது. இத்தனை ஆபத்துகளையும் தாண்டிப் பத்திரமாக உயிர் பிழைத்த அந்தச் சிறிய தவளையின் அசாத்தியமான உயிர் வாழும் திறனைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
