அதிர்ச்சி... தமிழ் பிக்பாஸ் குழுவில் ஒருவர் தற்கொலை!

 
விஜய் சேதுபதி
 


தமிழ் பிக்பாஸ் 8 சீசனில் பணிபுரிந்து வந்த அசோசியேட் இயக்குநர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் 50 நாட்களைக் கடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பம் முதலே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக இணையத்தில் சொல்லி வருகின்றனர். இதில் கடந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆண்கள் vs பெண்கள் என இருந்த டீமும் கலைக்கப்பட்டு தற்போது எல்லோரும் தனிப்பட்ட முறையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ்8 சீசனில் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்த ஸ்ரீதர் என்பவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். பிக்பாஸ் குழுவில் முக்கிய நபராக இருந்த ஸ்ரீதர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் படக்குழுவினரிடையேயும், விஜய் டிவி வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!