அதிர்ச்சி.. ஆசை வார்த்தை கூறி ரூ.56 லட்சம் அபேஸ்.. நிற்கதியில் தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்!

 
சுரேந்திர மூர்த்தி

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுரேந்திர மூர்த்தி. கால்கள் இல்லாத இளம் ஊனமுற்ற பெண்ணை சந்தித்துள்ளார். அடிக்கடி போனில் பேச ஆரம்பித்த சுரேந்திர மூர்த்தி, அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய பெண்ணும் சுரேந்திர மூர்த்தியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேந்திர மூர்த்தி அந்த பெண்ணிடம் தொழில் செய்ய பணம் கேட்டுள்ளார். அவரது வார்த்தையை நம்பி தன்னிடம் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொடுத்தார்.

இதனால் அந்த பெண் கடன் வாங்கி சுரேந்திர மூர்த்தியிடம் கொடுத்துள்ளார். சுரேந்திர மூர்த்தி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தினார். இளம்பெண் திருமணம் குறித்து கேட்டபோது, கால் இல்லாத பெண்ணை என் வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்றார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடன் பணத்தை கேட்டபோது சுரேந்திர மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் நேற்று சுரேந்திர மூர்த்தி மீது அந்த இளம்பெண் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சுரேந்திர மூர்த்தி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், மோசடி, பலாத்காரம் ஆகிய வழக்குகள் பதிவு செய்தனர். சுரேந்திர மூர்த்தி இளம்பெண்ணிடம் மொத்தம் ரூ.56 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "நானும் எனது தாயும் சுயதொழில் செய்கிறோம். சுரேந்திர மூர்த்தி என்னை 2018 இல் அறிமுகப்படுத்தினார். அவர் என்னை காதலிப்பதாக என்னிடம் கூறினார். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். அவர் நிறுவனம் தொடங்க விரும்புவதாகவும் மற்றும் அவரிடம் போதுமான பணம் இல்லை. உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்." நிறுவனம் நிறுவிய பின் திருப்பி தருவதாக கூறினார்.

அதனால் எனது எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். போதாதென்று மேலும் கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால், அவர் நிறுவனம் தொடங்கவில்லை. மேலும், திருமணம் குறித்த பேச்சு எழுந்தபோது, சில காரணங்களை கூறி தப்பினார். கடைசியில் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்ட ஆரம்பித்தார்.

அவர் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டபோது, கால் இல்லாத பெண்ணை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது தந்தை கூறினார். இந்நிலையில் சுரேந்திர மூர்த்தி 2024 ஜனவரி 31ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.இதை நம்பினேன். ஆனால், அதன் பிறகு அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சஞ்சய நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன்.

அங்குள்ள இன்ஸ்பெக்டர் விசாரித்து வருவதாகக் கூறினார், ஆனால் அதன் பிறகு அவர் புகாரைக் கண்டுக்கொள்ளவில்லை. சுரேந்திர மூர்த்தி, அவரது தந்தை பரமேஷரப்பா, தாய் மீனாட்சிம்மா ஆகியோர் மீது கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார். மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பணம், நகை கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சுரேந்திர மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web