அதிர்ச்சி... ராவணனுக்கு மாட்டிறைச்சி தந்து டான்ஸ் ஆடிய சீதை... பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம்; மாணவர்கள் போராட்டம்!

சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சி வழங்குவதாகவும், ராவணனுடன் சீதை நடனமாடுவது போலவும், ஹனுமன் கதாபாத்திரத்தை சிதைத்தும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது.
ABVP PU Students protested against the recent incident held on 29th March 2024 at a fest organised by DPA, Pondicherry University Ezhini 2K24, where a play mockery of the Ramayana, including depicting Sita offering beef to Ravana and distorting Hanumanji's character. pic.twitter.com/pDRGNb9yU7
— ABVP Tamilnadu - South (@ABVPSouthTN) March 30, 2024
இது குறித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாண்டிச்சேரி பல்கலைக்கழகதின் கலைத் துறையின் எழினி 2k24 என்ற விழாவின் போது நடந்த அவமானகரமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மரியாதைக்குரிய இதிகாசமான ராமாயணத்தின் பாத்திரங்களை “சோமயணம்” என்ற தலைப்பில் சிதைத்து அவமரியாதையாக சித்தரிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் சீதையை கீதா என்றும், ராவணன், பகவானாக சித்தரித்து நடனமாடுவதாக காண்பிக்கப்பட்டது. மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சியை வழங்குவதாக காண்பிக்கப்பட்டது. மேலும் சீதையை கடத்தும் காட்சியின் போது, ”எனக்கு திருமணமாகி விட்டது, ஆனால் நாம் நண்பர்களாக இருக்கலாம்” என்று கூறுவது போன்று காட்டப்பட்டது. இது ராமாயணத்தின் புனிதம் மற்றும் இந்த இதிகாசத்தை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கும் பல லட்சம் கணக்கான மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும், மற்றும் அவமரியாதை செய்வதாகும்.
Student Activists of ABVP PU are in protest against the Department of Performing Arts, Pondicherry University for organising a play mocking the Ramayana where Lord Ram, Lord Hanuman & Sita maa were disrespected and mocked.#abvp #pondicherryuniversity #jayshreeram #Hanuman pic.twitter.com/jtfgd7ZWzE
— ABVP Tamilnadu - South (@ABVPSouthTN) March 31, 2024
மேலும், ராமாயணத்தை முன்வைக்கும் இந்த தீங்கிழைக்கும் செயல் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான அமைப்புகளால் நன்கு திட்டமிடப்பட்ட செயல். கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான அமைப்புகள் வேண்டுமென்றே ராமரைக் கேவலப்படுத்தவும், சீதையின் புனிதத்தை கேள்வி கேட்கவும் விரும்பினர்.
மற்றொரு காட்சியில், ஹனுமான், “காஞ்சனேயா” என்று சித்தரிக்கப்பட்டார், அவரது வால் ராமருடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரமான செயல்கள் இந்து தர்மத்தின் மரியாதைக்குரிய தெய்வங்களை கேலி செய்வது மட்டுமல்லாமல், பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை இழிவுபடுத்துவதாக உள்ளது.
இந்த சுதந்திரம் மத நம்பிக்கை மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மரியாதையுடன் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Disgraceful news from Puducherry!
— Ajit Datta (@ajitdatta) March 31, 2024
Some scenes from Ezhini 2K24, a festival at the Department of Performing Arts, Pondicherry University. Sita was depicted as dancing with Ravana, being offered beef, & telling him "we can still be friends"
A den of taxpayer-funded urban naxals. pic.twitter.com/ssthZKvolj
1. நாடக ஆசிரியரும், இயக்குனருமான புஷ்பராஜ் (எம்பிஏ முதலாம் ஆண்டு) மற்றும் நாடகத்தில் நடித்துள்ள மிதுன் கிருஷ்ணா, ஸ்ரீபார்வதி, ஆதித்யா பேபி மற்றும் விஷக் பாசி ஆகியோர் எதிர்காலத்தில் மத கேலி மற்றும் அவமரியாதை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2. நாடகக் கலைத் துறைத் தலைவர் டாக்டர் ஷர்வணன் வேலு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பிற பேராசிரியர்கள், பணியாளர்கள் மீது இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்ய அனுமதி அளித்ததற்காக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எனவே பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய இதிகாசத்தை களங்கப்படுத்திய நகர்ப்புற நக்சல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை வலியுறுத்தி இன்று ஏபிவிபி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!