அதிர்ச்சி... லாரி மீது வேன் மோதி விபத்து.. 12 பெண்கள் உட்பட 15பேர் காயம்!

 
பெண்கள் உட்பட 15பேர் காயம்
தூத்துக்குடி அருகே காற்றாலைக்கான இறக்கை ஏற்றி வந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 12 பெண்கள் உட்பட 15பேர் காயம் அடைந்தனர். 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அழகுநாச்சியார் புரத்தில் இருந்து இன்று காலை தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குசாலையில் நாற்று அறுப்பு பணிக்காக 12 பெண்கள் சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னகுருசாமி மகன் காளி மகராஜன் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த வாகனம் எப்போதுவென்றான் பாலம் அருகே வந்தபோது முன்னால் காற்றாலை இறக்கைகளை ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த டிராவல்ஸ் வேன், சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் வள்ளியம்மாள் (49), கிறிஸ்டியம்மாள் உட்பட 12 பெண்கள் காயம் அடைந்தனர். 

அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் காற்றாலை இறக்கை ஏற்றி வந்த வாகனத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்த 2 ஊழியர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் எப்போதும் வென்றான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web