பேரதிர்ச்சி.. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய பட்டாசு ஆலைகள்.. தொடரும் பலி எண்ணிக்கை..!

 
சிவகாசியில் பட்டாசு விபத்து
சிவகாசி அருகே அடுத்தடுத்து பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் ஆரியா பட்டாசு ஆலை என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று மதியம் ஒரு மணியளவில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை தொழிலாளர்கள் தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.

Explosion at firecracker factory near Virudhunagar - One killed |  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் அங்கு வேலை செய்தவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அறைக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே பட்டாசு வெடி விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசியில் அதிர்ச்சி... அடுத்தடுத்து வெடித்து சிதறிய பட்டாசு ஆலைகள்; 11 பேர் உயிரிழப்பு

இதேபோல சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web