நள்ளிரவில் அதிர்ச்சி... பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து... ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

 
தீ விபத்து தீயணைப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில்  உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதடைந்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கீழுரைச் சேர்ந்தவர் நந்தகுமார். அதே பகுதி வசவாண்டி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் ஸ்ரீ வேலவன் பிளாஸ்டிக் என்ற  பெயரில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளனர். இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதை மறுசுழற்சி செய்து பவுடர் ஆக்கி பேக்கிங் செய்து பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு அனுப்பி வருகின்றனர். 

தீ விபத்து தீயணைப்பு

இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவல் அறிந்த சமயபுரம், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் மாவட்ட உதவி அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் தலைமையில் வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராடி அணைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் போலீசார் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் தீ விபத்து குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தால் பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரங்கள் என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.  

தீ விபத்து தீயணைப்பு

தீ விபத்து ஏற்பட்டவுடன் அக்கம் பக்கத்தில் குடியிருந்த பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இந்த தீ விபத்து மின்சாரம் இல்லாத பகுதியில் ஏற்பட்டதால் மர்ம நபர்கள் யாராவது தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு தீ விபத்து எப்படி நடந்தது என தெரிய வரும் என போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நிறுவனத்தில் யாரும் இல்லை. அதனால் பெரும் உயிர்சேதம் ஏதும் நிகழலாம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web