அதிர்ச்சி... மனைவியை சகோதரர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்த கணவன்... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!

 
பலாத்காரம் கூட்டு பாலியல் சிறுமி பாலியல் பலாத்காரம் கூட்டு பாலியல் சிறுமி பாலியல்

மனிதநேயமற்ற முறையில் தனது மனைவியையே வன்கொடுமை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். 

சஹாரன்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் (மைத்துனர்கள்) சேர்ந்து தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த அநீதியைத் தட்டிக் கேட்டபோது, அந்தப் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், இதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் கூறி அந்த மூவரும் மிரட்டியுள்ளனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

கணவர் வீட்டாரின் தொடர் சித்திரவதை மற்றும் மிரட்டலால் மனமுடைந்த அந்தப் பெண், விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற சஹாரன்பூர் போலீசார், புகாரில் கூறப்பட்டுள்ள கணவன் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். "குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மேலும், ஆபாச வீடியோ குறித்த ஆதாரங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்" என மூத்த காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பலாத்காரம் பாலியல் சிறுமி

வீட்டிற்குள்ளேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்தச் சூழல் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான நீதியும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.