அதிர்ச்சி... பெற்ற தாயே உடந்தை... மகள்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வளர்ப்பு தந்தை கைது!

 
பாலியல் பாலியல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பெற்ற மகள்கள் என்றும் பாராமல் இரண்டு பிஞ்சு சிறுமிகளுக்குப் பாலியல் கொடுமை இழைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டியைச் சேர்ந்த 11 மற்றும் 9 வயதுடைய இரு சிறுமிகளுக்கு, அவர்களின் தாயின் இரண்டாவது கணவரான வளர்ப்பு தந்தை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பாலியல் ரீதியாகக் கடுமையான தொல்லை கொடுத்து வந்துள்ளார். பள்ளி முடிந்து அப்பாவித்தனமாக வீடு திரும்பும் அந்தப் பிஞ்சு குழந்தைகளைத் தனியாக மடக்கி, அந்த நபர் தனது காம வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இந்தக் கொடுமை குறித்துக் குழந்தைகள் தங்களது பெற்ற தாயிடம் அழுது கொண்டே பலமுறை கூறியுள்ளனர். ஆனால், பெற்ற மகள்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அந்தப் பாசமில்லாத் தாய், தனது இரண்டாவது கணவரின் இந்த அநாகரிகச் செயலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி விவகாரத்தை முழுமையாக மூடி மறைக்க முயன்றுள்ளார். மேலும், இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று குழந்தைகளையும் மிரட்டியதாகத் தெரிகிறது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

வளர்ப்பு தந்தையின் அத்துமீறல் எல்லை மீறியதால், தாங்க முடியாத துயரத்திற்கு ஆளான அந்தச் சிறுமிகள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தங்களது பெரியம்மாவிடம் அழுதுகொண்டே தற்பொழுது விவரித்துள்ளனர். இதைக் கேட்டுப் பதறிப்போன பெரியம்மா, எக்காரணம் கொண்டும் இந்தக் காமுகனை சும்மா விடக்கூடாது என்று துணிச்சலுடன் முடிவெடுத்து உடனடியாக அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.

 

புகாரின் அடிப்படையில் அசுர வேகத்தில் களமிறங்கிய போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து, பிஞ்சு குழந்தைகளைச் சீரழித்த காமுகனான வளர்ப்பு தந்தை மற்றும் அதற்கு முழு உடந்தையாக இருந்து உண்மையை மறைக்க முயன்ற தாய் ஆகிய இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.