பேரதிர்ச்சி... வெறும் ரூ.200 க்காக பெற்ற தந்தையை கொலை செய்த மகன்... கதறித் துடித்த மனைவி!

 
ககன்பிஹாரி மல்லா.
ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி  ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில் வசித்து வந்தவர் ககன்பிஹாரி மல்லா. இவருக்கு வயது 62.ககன் பிஹாரி, தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஐ.டி.எல். சதுக்கத்தில் சிறிய பானக் கடை நடத்தி வந்தார். வியாழக்கிழமை அன்று  வீட்டில் செய்யப்பட்ட உணவுக்கு சந்தோஷ் சண்டையிட்டு சாப்பிட மறுத்துள்ளார். பின்னர் கடைக்கு வந்து தந்தையிடம் ரூ.200 கேட்டுள்ளார். இவரிடம் 24 வயதான இவரது மகன் சந்தோஷ் மல்லா தந்தையிடம்  ரூ.200 பணம் கேட்டுள்ளார். 

தர மறுத்ததற்காக பெற்ற தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம்  நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககன் பிஹாரி கடையிலிருந்தபோது அவரது இளையமகன் சந்தோஷ் மல்லா  அவரை தாக்கி கொலை செய்ததில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர்  சந்தோஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சந்தோஷ், கடையில் இருந்த மரக்கட்டையால் தந்தையின் தலையில் தாக்கியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்தவருக்கு உதவிசெய்து ரூர்கேலா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை மருத்துவர்கள் ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாக கூறினர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web