இளம்பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய இளைஞர்!! தொடரும் மணிப்பூர் அவலங்கள்!!

 
மாரய்யா

மணிப்பூரில் 2 இளம்பெண்களை ஆடையின்றி நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற கொடூரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபடும் முன்னரே அதே போல் ஒருசம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.  ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் இளைஞர் ஒரு  வம்பு செய்யத் தொடங்கினார். அந்தபெண் தடுத்து மறுக்கவே உடனே சரசரவென  அந்தப் பெண்ணின் ஆடைகளை  கிழித்து, நடுரோட்டில் நிர்வாணமாக்கினார். அந்த வழியாக சென்றவர்கள் யாரும் இதனை தட்டிக் கேட்கவோ தடுக்கவோ இல்லை.  

மாரய்யா


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலாஜி நகரில் வசித்து வரும்  இளம்பெண்  இரவு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த மாரய்யா   அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்.  உடனே அந்த பெண் மாரய்யாவை  தாக்க முயன்றார். ஆனால் போதையில் கண் மண் தெரியாமல் இருந்த மாரய்யா,  அந்த பெண்ணின் ஆடைகள் கிழித்தெறிந்தார்.  இதனை தடுக்க முயன்ற மற்றொரு பெண்ணையும் மாரய்யா தாக்கினார். பாதிக்கப்பட்ட பெண் எத்தனை முறை கெஞ்சி கூத்தாடியும்   மாரய்யா அந்த பெண்ணின்  ஆடைகளை முழுவதுமாக கிழித்தெறியும் வரை நிற்கவே இல்லை.  

போலீஸ்

ஆடையின்றி கூனிக்குறுகி நின்ற அந்த பெண்ணகை தொடர்ந்து 15 நிமிடங்களுக்கும் மேலாக  நிர்வாணமாக நிற்க வைத்தான். இதனை பலரும் வேடிக்கை பார்த்து சென்றனரே தவிர யாரும் உதவவில்லை.   மாரய்யா அங்கிருந்து கிளம்பியதும் தான் சிலர், அங்கிருந்த  பேனரை கிழித்து அந்த பெண் மீது போர்த்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்   சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாரய்யாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web