அதிர்ச்சி வீடியோ... மருத்துவ கல்லூரியின் மேற்கூரை இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்?!
குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில், புதிதாக மருத்துவ கல்லூரி ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில், மருத்துவ கல்லூரி கட்டிடத்தின் முதல் மாடியின், தொழிலாளர்கள் சிலர் கட்டுமான பணிகளில் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய ஒரு தொழிலாளரையும் மீட்பு படையினர் மீட்டனர்.
#WATCH | Gujarat: A slab of a newly constructed Medical College, collapsed in Morbi. Rescue operation underway. More details awaited. pic.twitter.com/0kWMaWrAhp
— ANI (@ANI) March 8, 2024
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு, சிக்கியுள்ள தொழிலாளரை மீட்டனர்.
இதுதொடர்பாக, மோர்பி தீயணைப்பு மீட்புப்படையினர் , 'புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியின் ஒரு பக்க கூரை இடிந்து விழுந்ததாக நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது. எங்கள் அணியினர் சம்பவ இடத்திற்குச் இடிபாடுகளில் சிக்கிய 4 வீரர்களை மீட்டனர். ஒருவர் மட்டும் உள்ளே சிக்கியிருந்தார். அவரது முகம் மட்டுமே தெரிந்தது. அவரது முழு உடலும் உள்ளே சிக்கியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் அவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்' என்றனர்.
இடிபாடுகளில் சிக்கியதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.