பாகிஸ்தான் துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு.. 8 பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக் கொலை!

 
குவாடர் துறைமுகம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. குவாடர் துறைமுக வளாகத்தில் பல அரசு மற்றும் துணை ராணுவ அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், குவாடர் துறைமுகத்தில் உள்ள  அதிகாரிகள் பணிபுரியும் ளாகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடு மற்றும் ஷெல் சத்தம் கேட்டதால் துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் துறைமுகத்திற்கு விரைந்தனர். ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த தாக்குதலில் துறைமுகத்திற்குள் புகுந்த 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனிடையே பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தானில் சீனாவின் முதலீடுகளுக்கு இந்த இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தான் சுரண்டுவதாக சீனாவும் பாகிஸ்தானும் குற்றம்சாட்டி வருகின்றன. தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்பட்டு வரும் குவாடர் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கூறியதாவது, குவாடர் துறைமுக நிர்வாக வளாகத்தில் 8 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர் . அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வன்முறையைப் பயன்படுத்த விரும்பும் எவரும் அரசின் கருணையைப் பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக துணிச்சலுடன் போராடிய அனைத்து ராணுவ வீரர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web