“ஒரு தலித் முதல்வராகக் கூடாதா?” - எடப்பாடிக்கு வன்னி அரசு சரமாரி கேள்வி!

 
எடப்பாடி பழனிசாமி வன்னி அரசு எடப்பாடி பழனிசாமி வன்னி அரசு

விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க இபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக எழுந்துள்ள புகார், தமிழக அரசியலில் சாதிய மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதில், "திமுக மற்றும் அதிமுக இணைந்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டார்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திருமா விஜய்

"ஒரு தலித் தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கூடாதா? அந்த அதிகாரத்தை எளிய மக்கள் பெறுவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "எங்கள் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க மறுத்தார் என்ற சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரடியான விளக்கத்தை அளிக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக - பாஜக ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறுவது  ஒரு வகையான பில்டப் மட்டுமே...  திருமா விளாசல்!

சமூகநீதி மற்றும் சமத்துவத்தைப் பேசும் திராவிடக் கட்சிகள், அதிகாரம் என்று வரும்போது ஒரு தலித் தலைவரை முன்னிறுத்தத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியை வன்னி அரசின் இந்தப் பதிவு உரக்கச் சொல்லியுள்ளது. தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இடையே எழுந்துள்ள இந்த மோதல் அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.