பெண் கவுன்சிலருக்கு அரிவாள்வெட்டு!! நள்ளிரவில் பயங்கரம்!!
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகரில் வசித்து வருபவர் சித்ரா . இவர் தி.மு.க. 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் மற்றும் மகன் மோகன் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.
இருவரும் கத்தி கூச்சலிட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?