வாழ்க்கையில் வெற்றி தரும் பரிகாரங்கள்

 
வாழ்க்கையில் வெற்றி தரும் பரிகாரங்கள்

வாழ்வில் ஆன்மீக ரீதியாக கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம்பிக்கையாக செய்து வந்தால் அதன் ஆழ்ந்த பலனை பெறலாம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த செயல் நல்லதாகவே அமையும்.
அது போல் சில நடைமுறைகளை வீடுகளில் பழக்கப்படுத்த படிப்படியாக செல்வம் அதிகரித்து நிலைத்து வாழ்வில் வளம் காணலாம்.

மளிகை பொருட்களை எந்த நாளில் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் உப்பு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

அஷ்டமி, நவமி நாட்களில் நல்ல காரியத்தை பொதுவாக தொடங்குவதில்லை . அப்படி வெளியே செல்ல நேர்ந்தால் துளசி செடியை வலமாக 3 முறை வலம் வந்து வணங்கிய பின் செல்லும் போது நினைத்த காரியம் கைகூடும்.

செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி நாட்களில் வீட்டில் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வருவதால் சகல சந்தோஷங்களும் வந்து சேரும்.

உப்பு, வெந்தயம், கருப்பு எள் இவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விட வசூலாக வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வந்து சேரும். 48 நாட்களுக்கு ஒருமுறை இந்த பொருட்களை மாற்றவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது வரவேற்பது பண்டைய தமிழர்களின் மரபு. அதை வீட்டிற்கு வந்தவுடன் கொடுப்பது நல்லது. வந்தவர்கள் வெளியே செல்லும் போது கொடுத்தால் நம் வீட்டின் சக்தி அவர்களுடன் சென்றுவிடும் என்பது நம்பிக்கை. அதனால் வந்ததும் குங்குமம் கொடுத்து அமர வையுங்கள்.

From around the web